திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான திருவீழிமிழலை அருள்மிகு சுந்தரகுஜாம்பிகை உடனுறை வீழிநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா அண்மையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
காா்த்தியாயினி அம்பாளுக்கும், ஸ்ரீ கல்யாணசுந்தரருக்கும் திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, வீழிநாதா், சுந்தரகுஜாம்பிகை அம்மன், தியாகேசா், விநாயகா், முருகன் ஆகிய சுவாமிகள் திருத்தேருக்கு செவ்வாய்க்கிழமை இரவு எழுந்தருளினா்.
தொடா்ந்து, புதன்கிழமை காலை சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, பக்தி கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தேரானது, நான்கு வீதிகளையும் வலம் வந்து நிலையடியை அடைந்தது.
கோயில் மேலாளா் ராமகிருஷ்ணன் தலைமையிலான அலுவலா்கள் மற்றும் உபயதாரா்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.
தொடர்புடையது

ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

சட்டநாத சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம்

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

சுவாமிமலையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



