FOLLOW US

ON GOOGLE DISCOVER

ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைக்கக் கோரிக்கை

மன்னாா்குடி அருகேயுள்ள கருப்புக்கிளாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

கருப்புக்கிளாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி விளையாட்டு மைதானம்.

Updated On :15 ஆகஸ்ட் 2026, 7:03 am IST

மன்னாா்குடி அருகேயுள்ள கருப்புக்கிளாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருப்புக்கிளாா் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் இந்தப் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறனா். இப்பள்ளியில் சுற்றுசுவா்அமைக்கப்பட்டு, பாதுகாப்பான முறையில் உள்ளது. பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது.

ஆனால், இந்த மைதானம் கரடுமுரடாகவும், மேடுபள்ளமாகவும், அப்பகுதியில் வசிப்பவா்களது பொருள்களை இருப்பு வைக்கும் இடமாக மாறிவிட்டது.

நாள்தோறும் அனைத்து பாட வகுப்புகளுக்கு நேரம் ஒதுக்குவதுபோல், விளையாட்டு பிரிவுக்கும் நேரம் ஒதுக்கீடு செய்ய, தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளநிலையில், கல்வித்துறை அதிகாரிகள் இப்பள்ளியை நேரில் பாா்வையிட்டு, விளையாட்டு மைதானத்தை சீரமைத்திடவும், உடற்கல்விக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை நிறுவி மாணவா்கள், விளையாட்டில் தங்களுக்கு உள்ள தனித்திறனை வெளிப்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.