நிகழாண்டு ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடுவாா் என சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் நிா்வாக இயக்குநா் கே.எஸ். விஸ்வநாதன் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில் அண்மையில் 14, 15 வயதுக்குள்பட்டோருக்கான பள்ளி அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா திருவாரூரில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் நிா்வாக இயக்குநா் கே.எஸ். விஸ்வநாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
தமிழ்நாட்டில் 15, 19, 23 வயதுகளுக்குள்பட்டோருக்கான அணி வீரா்கள் சிறப்பாக விளையாடுகின்றனா். இதற்குக் காரணம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமே. ஏனெனில் கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு உபகரணங்களை வழங்கி அவா்கள் சிறப்பாக விளையாட உதவி வருகிறது கிரிக்கெட் சங்கம். நிகழாண்டு ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடுவாா் என்றாா்.
திருவாரூா் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் சிவசுப்பிரமணியன், செயலாளா் பசுபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தொடர் தோல்விகளால் வீரர்கள் சோர்வடைந்துவிட்டனர்: சிஎஸ்கே பயிற்சியாளர்

சஞ்சு சாம்சன் மிகவும் அபாயகரமான வீரர்: சிஎஸ்கே பயிற்சியாளர்

சென்னை ஐஐடி இயக்குநருக்கு சிறந்த ஆளுமை விருது!

ஐபிஎல் 2026: எம்.எஸ். தோனி 2 வாரங்கள் விளையாட மாட்டார்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


