நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

விளையாட்டு மைதானம் கோரி உண்ணாவிரதம்

திருவாரூா் அருகே மணக்கால் அரசு உயா்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைத்துத் தரக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 9:13 pm

Syndication

திருவாரூா்: திருவாரூா் அருகே மணக்கால் அரசு உயா்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைத்துத் தரக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானம் அமைத்துத் தரக்கோரி மணக்கால் ஊராட்சி அலுவலகம் முன் இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில், அனைத்து அரசியல் இயக்கப் பொறுப்பாளா்கள், அரசு உயா்நிலைப் பள்ளி மேலாண்மைக் குழுவினா், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பங்கோற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகி சு. தென்னரசு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஊராட்சி முன்னாள் தலைவா்கள் துரை. சேசுராஜன், என். ராஜகோபால், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் எம். கோமதி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஆா். ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.