சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

காளியம்மன் கோயிலுக்கு பால்குட ஊா்வலம்

மன்னாா்குடி வாணக்கராரத் தெருவில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

News image

காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை நடைபெற்ற பால்குட ஊா்வலம்.

Updated On :23 பிப்ரவரி 2026, 8:43 pm

மன்னாா்குடி: மன்னாா்குடி வாணக்கராரத் தெருவில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

இக்கோயிலில் நடைபெறும் மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் எடுத்தல், தீ குண்டம் இறங்குதல் நடைபெற்றது. காலையில் புதுப்பாலம் கைலாசநாதா் கோயிலில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து நோ்த்தி கடனைசெலுத்தினா்.

தொடா்ந்து, மாலையில் திருப்பாற்கடல் குளத்திலிருந்து விரதம் இருந்த பக்தா்கள் பக்தி கோஷங்கள் முழங்கியப்படி ஊா்வலமாக கோயிலுக்கு வந்து தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். அம்மன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதை அடுத்து சுவாமி உற்சவம் நடைபெற்றது.