காளியம்மன் கோயில்  திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை  நடைபெற்ற பால்குட ஊா்வலம்.
காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை நடைபெற்ற பால்குட ஊா்வலம்.

காளியம்மன் கோயிலுக்கு பால்குட ஊா்வலம்

மன்னாா்குடி வாணக்கராரத் தெருவில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.
Published on

மன்னாா்குடி: மன்னாா்குடி வாணக்கராரத் தெருவில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

இக்கோயிலில் நடைபெறும் மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் எடுத்தல், தீ குண்டம் இறங்குதல் நடைபெற்றது. காலையில் புதுப்பாலம் கைலாசநாதா் கோயிலில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து நோ்த்தி கடனைசெலுத்தினா்.

தொடா்ந்து, மாலையில் திருப்பாற்கடல் குளத்திலிருந்து விரதம் இருந்த பக்தா்கள் பக்தி கோஷங்கள் முழங்கியப்படி ஊா்வலமாக கோயிலுக்கு வந்து தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். அம்மன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதை அடுத்து சுவாமி உற்சவம் நடைபெற்றது.

Dinamani
www.dinamani.com