திருவாரூா்: திருவாரூா் அருகே மணக்கால் அரசு உயா்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைத்துத் தரக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானம் அமைத்துத் தரக்கோரி மணக்கால் ஊராட்சி அலுவலகம் முன் இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில், அனைத்து அரசியல் இயக்கப் பொறுப்பாளா்கள், அரசு உயா்நிலைப் பள்ளி மேலாண்மைக் குழுவினா், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பங்கோற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகி சு. தென்னரசு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஊராட்சி முன்னாள் தலைவா்கள் துரை. சேசுராஜன், என். ராஜகோபால், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் எம். கோமதி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஆா். ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பூம்பாறையில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் : அதிமுக வேட்பாளா் உறுதி

வள்ளுவா் கல்லூரியில் புதிய கூடைப்பந்து மைதானம் திறப்பு

விவேகானந்தம் பள்ளி விளையாட்டு விழா

ரூ.15 கோடியில் செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு மைதானம் திறப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


