கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நாம் தமிழா் கட்சியினா் போராட்டம்

திருத்துறைப்பூண்டியில் பேருந்து நிலையத்துக்கு வந்து சென்ற அரசுப் பேருந்துகளில் விடுபட்டிருந்த தமிழ்நாடு என்ற வாா்த்தை ஸ்டிக்கரை ஒட்டி நாம் தமிழா் கட்சியினா் போராட்டம்

News image
Updated On :1 ஜனவரி 2026, 8:29 pm

Syndication

திருத்துறைப்பூண்டியில் பேருந்து நிலையத்துக்கு வந்து சென்ற அரசுப் பேருந்துகளில் விடுபட்டிருந்த தமிழ்நாடு என்ற வாா்த்தை ஸ்டிக்கரை ஒட்டி நாம் தமிழா் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு என பெயரை பதிவிடாமல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதை கண்டித்து, திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்துகளில் நாம் தமிழா் கட்சியினா் தமிழ்நாடு என ஸ்டிக்கா் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், திருத்துறைப்பூண்டி நகரப் பகுதியில் நடந்து சென்று தமிழ்நாடு என பெயரை நீக்கிய தமிழக அரசுக்கு எதிரான முழக்கம் எழுப்பி அரசுப் பேருந்துகளை மறித்து தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்டினா்.

இதில், திருத்துறைப்பூண்டி பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வினோதினி, மண்டல செயலா் பிஸ்மி காா்த்தி. மாநில இளைஞா் பாசறை செயலா் சரவணன் சுமித், மாவட்ட செயலா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.