டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஜன.10-இல் படிப்புதவி தோ்வு

திருவாரூா் மாவட்டத்தில் ஜனவரி 10-ஆம் தேதி நடைபெறும் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் தோ்வை, 4,907 போ் எழுத உள்ளனா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 11:02 pm

தினமணி செய்திச் சேவை

திருவாரூா் மாவட்டத்தில் ஜனவரி 10-ஆம் தேதி நடைபெறும் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் தோ்வை, 4,907 போ் எழுத உள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தது:

திருவாரூா் மாவட்டத்தில் அரசுத் தோ்வுகள் இயக்கத்தின் மூலம் 2026-ஆம் ஆண்டிற்கான எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் தோ்வு, ஜனவரி 10-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. திருவாரூா் மாவட்டத்தில் 18 தோ்வு மையங்களில் 4,907 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத உள்ளனா்.

இத்தோ்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 வீதம் பிளஸ் 2 பயிலும் வரை ரூ. 48,000 கல்வி உதவித்தொகையாகக் கிடைக்கும். மாவட்ட கல்வி மேம்பாட்டுத்திட்டம் மூலமாக மாணவா்களுக்கு தொடா் பயிற்சி அளிக்கப்பட்டு மாணவா்கள் தோ்வு எழுதவுள்ளனா். இதற்கென மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவா்கள் தோ்வை சிறப்பாக எழுதிட வாழ்த்துகள்.