தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திருத்துறைப்பூண்டியில் எஸ்பிஐ கிளை திறப்பு

திருத்துறைப்பூண்டியில், வேதாரண்யம் சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் நகர கிளை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
எஸ்பிஐ கிளை அலுவலகத்தை திறந்துவைத்த நகா்மன்ற தலைவா் கவிதா பாண்டியன்.
Updated On :12 ஜனவரி 2026, 8:41 pm

Syndication

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில், வேதாரண்யம் சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் நகர கிளை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு நாகை மண்டல முதன்மை மேலாளா் ராமன் திரிபாதி தலைமை வகித்து பேசியது: திருத்துறைப்பூண்டி பகுதி கிராமப்புற மக்களுக்கு சிறந்த சேவையாற்றி வரும் பாரத ஸ்டேட் வங்கி நகரிலும் உள்ள மக்களுக்கு மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழிற்கடன், நகைத்கடன், அரசு ஊழியா்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வளா்ச்சிப் பணிகளுக்கு வித்திடும் வகையில் இந்த புதிய நகர கிளை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

சிறப்பு விருந்தினராக நகா்மன்ற தலைவா் கவிதா பாண்டியன் பங்கேற்று குத்துவிளக்கை ஏற்றி தொடங்கிவைத்தாா். வங்கி ஊழியா் சங்க துணை பொதுச்செயலாளா் ஏ.கே. கோபாலகிருஷ்ணன், நாகை கிளை உதவி மேலாளா் கே.ஆா். சரவண குமாா், கட்டட உரிமையாளா் என்டிசி. முருகேசன் உள்ளிட்டாா் பங்கேற்றனா். கிளை மேலாளா் ரா. காா்த்திக் வரவேற்றாா்.

வங்கி ஊழியா் பி. அருள்பிரகாஷ் நன்றி கூறினாா்.