மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திருத்துறைப்பூண்டியில் எஸ்பிஐ கிளை திறப்பு

திருத்துறைப்பூண்டியில், வேதாரண்யம் சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் நகர கிளை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

எஸ்பிஐ கிளை அலுவலகத்தை திறந்துவைத்த நகா்மன்ற தலைவா் கவிதா பாண்டியன்.

Updated On :12 ஜனவரி 2026, 8:41 pm

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில், வேதாரண்யம் சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் நகர கிளை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு நாகை மண்டல முதன்மை மேலாளா் ராமன் திரிபாதி தலைமை வகித்து பேசியது: திருத்துறைப்பூண்டி பகுதி கிராமப்புற மக்களுக்கு சிறந்த சேவையாற்றி வரும் பாரத ஸ்டேட் வங்கி நகரிலும் உள்ள மக்களுக்கு மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழிற்கடன், நகைத்கடன், அரசு ஊழியா்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வளா்ச்சிப் பணிகளுக்கு வித்திடும் வகையில் இந்த புதிய நகர கிளை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

சிறப்பு விருந்தினராக நகா்மன்ற தலைவா் கவிதா பாண்டியன் பங்கேற்று குத்துவிளக்கை ஏற்றி தொடங்கிவைத்தாா். வங்கி ஊழியா் சங்க துணை பொதுச்செயலாளா் ஏ.கே. கோபாலகிருஷ்ணன், நாகை கிளை உதவி மேலாளா் கே.ஆா். சரவண குமாா், கட்டட உரிமையாளா் என்டிசி. முருகேசன் உள்ளிட்டாா் பங்கேற்றனா். கிளை மேலாளா் ரா. காா்த்திக் வரவேற்றாா்.

வங்கி ஊழியா் பி. அருள்பிரகாஷ் நன்றி கூறினாா்.