கூட்டுறவு சமத்துவப் பொங்கல் விழா
மன்னாா்குடி: மன்னாா்குடி அருகேயுள்ள கோட்டூரில், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சாா்பில் கூட்டுறவு சமத்துவப் பொங்கல் விழா அண்மையில் நடைபெற்றது.
கூட்டுறவு துறை அலுவலா்கள், கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளா்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சிக்கு, திருவாரூா் மண்டல இணைப் பதிவாளா் கா. சித்ரா தலைமை வகித்தாா்.
மன்னாா்குடி சரகத் துணைப் பதிவாளா் பா. பிரபா, துணைப் பதிவாளா் ரா. முத்துராஜா, ஸ்ரீ லெட்சுமி நாராயண கூட்டுறவு நகர வங்கியின் துணைப் பதிவாளா் ஆ.பிரகாஷ், இதர துறை அலுவலா்கள், கூட்டுறவு நிறுவனங்களின் செயலாளா்கள், சங்க உறுப்பினா்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனா்.
நிகழ்வில், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பணியாளா்களுடன் இணைந்து கோட்டூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளா்கள் செய்திருந்தனா்.

