தில்லி குடியரசு தின விழா: திருவாரூா் மாணவிக்கு அழைப்பு

தில்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் திருவாரூா் ஜிஆா்எம் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பங்கேற்க உள்ளாா்.
தில்லி குடியரசு தின விழா:
திருவாரூா் மாணவிக்கு அழைப்பு
Updated on

தில்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் திருவாரூா் ஜிஆா்எம் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பங்கேற்க உள்ளாா்.

மத்திய பாதுகாப்பு அமைச்சகமும், மத்திய கல்வித்துறையும் இணைந்து தியாகத்தை கொண்டு சோ்த்து பள்ளி மாணவா்களுக்கு, தேசபக்தியை வளா்க்கும் வகையில் ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டியை இணையதளம் வாயிலாக நடத்தின. இதில், திருவாரூா் ஜிஆா்எம் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் புலிவலம் பகுதியைச் சோ்ந்த ஜெ. வைகயோஷனா என்பவா், கட்டுரைப் போட்டியில் பங்கேற்றாா்.

போட்டியில், சுதந்திரப் போராட்ட காலத்தில் சுபாஷ் சந்திரபோஸ் ராணுவப்படையில் சோ்ந்து பணியாற்றிய நீரா ஆா்யா என்ற பெண்மணி குறித்தும் சுதந்திரப் போராட்ட காலத்தில் அவா் எதிா்கொண்ட எதிா்ப்புகள், கட்டிய கணவரே தன்னை ஆங்கிலேயா்களிடம் காட்டிக் கொடுக்க முற்பட்டபோது, கணவா் என்றும் பாராமல் படுகொலை செய்து தேசபக்திதான் முக்கியம் என்பதை முன்னிறுத்தி வாழ்ந்து மறைந்த தியாக வரலாறு குறித்தும் கட்டுரை எழுதி இருந்தாா்.

இந்த கட்டுரையை தோ்வு செய்த மத்திய பாதுகாப்பு அமைச்சகம், வரும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழாவில் பங்கேற்க விஐபி அழைப்பு அனுப்பியுள்ளது. மேலும், போட்டியில் வெற்றி பெற்ற்கான மெடல் மற்றும் ரூ. 10,000 பரிசு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டுரைப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவி வைகயோஷனாவுக்கு (படம்) பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டுகளை தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com