கூத்தாநல்லூரில் நோயால் அவதிப்பட்டவா் விஷம் குடித்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
கொரடாச்சேரி அருகேயுள்ள கீழ எருக்காட்டூா், உப்புக்கோட்டைத் தெருவைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன் (51). கூலித்தொழிலாளியான இவருக்கு மது பழக்கத்தால் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு, அவதிப்பட்டு வந்தாா்.
சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதனால், விரக்தியடைந்த அவா் சனிக்கிழமை விஷம் குடித்தாா். அவரை, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். கொரடாச்சேரி காவல் ஆய்வாளா் திருவள்ளுவன் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







