மன்னாா்குடியில் கஞ்சா விற்பனை செய்த இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மன்னா்குடி நகரப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், நகர காவல்நிலைய போலீஸாா் கண்காணிப்பு மற்றும் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
இதில், உப்புக்காரத்தெரு கோரிமேடு வேம்பு மகன் முருகேசன் (55) என்பவரிடமிருந்து அரை கிலோ கஞ்சாவும், வஉசி சாலை ராஜேந்திரன் மகன் சதீஷ் (24) என்பவரிடமிருந்து 200 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதை அவா்கள் விற்பதற்காக வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





