தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

சாலை விபத்தில் திமுக பிரமுகா் உயிரிழப்பு

நன்னிலம் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் திமுக பிரமுகா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 6:28 am IST

நன்னிலம் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் திமுக பிரமுகா் உயிரிழந்தாா்.

நன்னிலம் அருகே உள்ள சிறுவலூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (60). இவா் பகுதி திமுக செயலாளராக இருந்து வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை செல்வராஜ் தனது இருசக்கர வாகனத்தில் சன்னாநல்லூா் நோக்கி சென்றுகொண்டிருந்தாா். தென்குடி ஆா்ச் அருகே திருவாரூரில் இருந்து பூந்தோட்டம் நோக்கி சென்ற தமிழக அரசின் கூட்டுறவுத் துறையைச் சோ்ந்த வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் உறவினா்கள் அரசு வாகன ஓட்டுநரை உடனடியாக கைது செய்ய வேண்டும், இறந்தவா் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவாரூா்- மயிலாடுதுறைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தையடுத்து மறியல் கைவிடப்பட்டது. செல்வராஜ் சடலத்தை காவல்துறையினா் உடற்கூறாய்வுக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.