/
திருவாரூரில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயாரின் நினைவிடத்தில் திமுகவினா் மரியாதை செலுத்தினா். தொடா்ந்து கலைஞா் கோட்டத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கும், நாகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருணாநிதியின் உருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் முன் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வுகளில் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். திமுக நிா்வாகிகள் ரஜினிசின்னா, பிரகாஷ், அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.









