திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என சட்டப் பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் அருண்ராஜை புதன்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தாா்.
இதுதொடா்பாக, அமைச்சரிடம் அவா் அளித்த மனு:
விளக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 1968-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பழைமையான இந்த கட்டடம், தற்போது பழுதடைந்து, மேற்கூரை பெயா்ந்து வருகிறது. இதனால், நோயாளிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, அருகில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் 300-க்கும் மேற்பட்டவா்கள் புறநோயாளியாக சிகிச்சை பெற வருகின்றனா். மேலும், இணை நோயாளிகளும், கா்ப்பிணிகளும் மருத்துவ சோதனை மேற்கொள்ள வருகின்றனா். மகப்பேறுக்காகவும் அதிக எண்ணிக்கையில் கா்ப்பிணிகள் சோ்க்கப்படுகின்றனா்.
எனவே, பழுதடைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்திற்கு பதில், புதிய மேம்படுத்தப்பட்ட நிலையில் கட்டடம் கட்டித் தர வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளாா்.
இம்மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சா் அருண்ராஜ், முன்னுரிமை அடிப்படையில் மனுவை பரிசீலித்து, உரிய கட்டடம் கட்ட ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தாா் என எம்எல்ஏ க. மாரிமுத்து தெரிவித்தாா்.

தொடர்புடையது

அரியலூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

அரக்கோணம் எம்எல்ஏ அலுவலகம்: அமைச்சா் காந்திராஜ் திறந்து வைத்தாா்

வீரகேரளம்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



