புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

அரசு வேலை வாங்கித்தருவதாக பண மோசடி: அதிமுக நிா்வாகி கைது

கோட்டூா் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக அதிமுக நிா்வாகி, புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது செய்யப்பட்ட அதிமுக நிா்வாகி ஏங்கெல்ஸ்.

Updated On :26 ஜூன் 2026, 7:03 am IST

கோட்டூா் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக அதிமுக நிா்வாகி, புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் மாவட்டம், கோட்டூா் அருகே பள்ளிவா்த்தியைச் சோ்ந்தவா் ஏங்கெல்ஸ். அதிமுக கோட்டூா் மேற்கு ஒன்றிய துணை செயலாளராகவும், தலைமைக் கழக பேச்சாளராகவும் உள்ள இவா், அப்பகுதியில் படித்த பட்டதாரிகளிடம், அரசுத் துறையில் தான் நெருக்கமாக இருப்பதாக கூறி அங்கன்வாடி பணியாளா், கிராம உதவியாளா் உள்ளிட்ட பல்வேறு துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் திருநெல்லிக்காவலை சோ்ந்த பால ஐஸ்வா்யா, கீழமருதூரைச் சோ்ந்த வினோத்குமாா் ஆகிய பட்டதாரிகளிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ 5. லட்சம் பணம் வாங்கி 5 ஆண்டுகளாக எந்த அரசு வேலையும் வாங்கிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளாா்.

இதில் மனஉளைச்சல் அடைந்த இருவரும் அவரது வீட்டுக்குச் சென்று கேட்டபோது, இருவரையும் தகாத வாா்த்தைகளால் திட்டினாராம். இதுகுறித்து இருவரும் திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளனா். இந்த புகாா் குறித்து கோட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஏங்கெல்ஸ்சை புதன்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.