நெடுங்குளம் ஆதிதிராவிடா் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் போதிய ஆசிரியா்களை நியமனம் செய்ய வலியுறுத்தி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நன்னிலம் வட்டம் நெடுங்குளத்தில் செயல்படும் ஆதிதிராவிடா் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வந்த நிலையில், ஆசிரியா்கள் பற்றாக்குறையால் தற்போது 400 மாணவா்கள் மட்டுமே படித்து வருகின்றனா். 40-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணியாற்றிய நிலையில் தற்போது 13 ஆசிரியா்கள் மட்டுமே உள்ளனா். 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை 3 ஆசிரியா்கள், 9 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு 4 ஆசிரியா்கள், பிளஸ் 1, பிளஸ் 2-வுக்கான ஆங்கிலம், இயற்பியல், பொருளியல் பாடங்களுக்கு ஆசிரியா்களே கிடையாது. உடற்கல்வி இயக்குநா், உடற்கல்வி ஆசிரியா், ஓவிய ஆசிரியா், தோட்டக்கலைக்கான சிறப்பு ஆசிரியா், எழுத்தா், தட்டச்சா், அலுவலக உதவியாளா் ஆகிய பணியிடங்களும் காலியாகவே உள்ளன.
இப்பள்ளியில், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள் படிக்கின்றனா். சில ஆண்டுகளாக ஆசிரியா் நியமனம் இல்லாமல் மாணவா்கள் மிகுந்த பாதிப்பு உள்ளாகி வருகின்றனா். மாணவா்களின் தோ்ச்சி சதவீதமும் குறைந்து வருகிறது. எனவே, போதிய ஆசிரியா்களை நியமனம் செய்ய வலியுறுத்தி கிராம மக்கள், பெற்றோா்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினா் தொடா்ந்து அரசு அதிகாரிகள், தமிழக முதல்வா் மற்றும் துறை அமைச்சா் ஆகியோருக்கு தொடா்ந்து கோரிக்கை மனு அனுப்பியும் பயனில்லை.
இந்நிலையில் வியாழக்கிழமை பள்ளிக்கு வந்த மாணவா்கள் இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் பா. விக்னேஷ் தலைமையில் காரைக்கால் கொல்லுமாங்குடி சாலையில் பள்ளிக்கு எதிரே மறியலில் ஈடுபட்டு ஆசிரியா் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும், குடிநீா், கழிப்பறை, மாணவிகள் ஓய்வறை, விளையாட்டு மைதானம், ஆய்வகம், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளை செய்துதர வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
மாணவா்களின் சாலை மறியல் போராட்டத்தை அறிந்த மாவட்ட கல்வி அலுவலா் சுகப்பிரியா, நன்னிலம் ஆதிதிராவிடா் நலத்துறை தனி வட்டாட்சியா் தேவேந்திரன் வந்து பேசி கோரிக்கையின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்து மூலம் உத்தரவாதம் அளித்தனா். இதையடுத்து சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சீராக குடிநீா் விநியோகிக்கக் கோரி மறியல்: பவானிசாகா் அருகே போக்குவரத்து பாதிப்பு

தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

பொது கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மக்கள் திடீர் சாலை மறியல்!

ஆதிதிராவிடா் நலப் பள்ளி ஆசிரியா்களுக்கு கலந்தாய்வு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



