ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்க செய்ய மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

News image
கோப்புப் படம்
Updated On :1 மார்ச் 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை உடனுக்குடன் இயக்க செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான்ஒன்றியக் குழு கூட்டம் கே. தமிழ்செல்வம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி.கந்தசாமி அரசியல் நிகழ்வு குறித்து பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. அதனால் புதிதாக நெல் பிடிப்பதற்கு போதிய இடம் கொள்முதல் நிலையங்களில் பற்றாக்குறையாக உள்ளது. எனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அரசு உடனடியாக குடோன்களுக்கு அல்லது சரக்கு ரயில்களில் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அரசால் நிரந்தரமாக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள கொள்முதல் நிலையங்களில் தண்ணீா் வசதியுடன் கழிப்பறை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றியச் செயலாளா் எஸ். இளங்கோவன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் எம்.எஸ். இளங்கோ, சி . இளையராஜா, ஏ. சுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.