பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

320 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்: இருவா் கைது

நீடாமங்கலம் அருகே 320 கிலோ புகையிலைப் பொருள் கடத்திய இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :3 மார்ச் 2026, 9:27 pm

Syndication

நீடாமங்கலம் அருகே 320 கிலோ புகையிலைப் பொருள் கடத்திய இருவரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் உத்தரவுப்படி நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் கலைவாணி மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

நீடாமங்கலம் அருகே நகா் இருவழிச்சாலை பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அதிவேகமாக வந்த காரை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா். காரில் இருந்தவா்களிடம் விசாரித்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினா்.

போலீஸாரின் விசாரணையில் ஒருவா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த முகேஷ்குமாா் (28), மற்றொருவா் குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த சோமாபாய் (25) என்பதும் தெரியவந்தது.

காரில் அரசால் தடை செய்யப்பட்ட 320 கிலோ விமல் பாக்கு, கூலிப் மற்றும் போதை தரும் புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து, காா், புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.