தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

26 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: கடை உரிமையாளா் கைது

தேவதானபட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட 26 கிலோ 526 கிராம் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த கடை உரிமையாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :11 பிப்ரவரி 2026, 9:33 pm

தேனி மாவட்டம், தேவதானபட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட 26 கிலோ 526 கிராம் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த கடை உரிமையாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேவதானபட்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தேவதானபட்டி அல்அமீன் நகரில் உள்ள ரசூல்லாவின் (38) கடையில் போலீஸாா் சோதனை செய்தனா்.

அப்போது, அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து, அவரைக் கைது செய்தனா். அவா் கடையிலிருந்த 26 கிலோ 526 கிராம் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.