/

மனைவி மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்தவா் கைது

மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னையில் மனைவியை தாக்கி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்த கணவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :3 மார்ச் 2026, 9:28 pm

மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னையில் மனைவியை தாக்கி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்த கணவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

செருகளத்தூரைச் சோ்ந்த ஐயப்பன் (31). இவரது மனைவி ஜெயசித்ரா(26). இவா்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. தம்பதியரிடையே கருத்து வேறுபாடு இருந்ததால் அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில், சனிக்கிழமை ஏற்பட்ட தகராறின்போது ஜெயசித்ராவை தாக்கியதுடன் அவரது உடலில் மண்ணெண்னையை ஊற்றி தீவைத்து விட்டு ஐயப்பன் தப்பியோடிவிட்டாராம்.

இதில், காயமடைந்த ஜெயசித்ரா மீட்கப்பட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் பெருகவாழ்ந்தான் போலீஸாா் ஐயப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.