யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மனைவி மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்தவா் கைது

மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னையில் மனைவியை தாக்கி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்த கணவா் கைது செய்யப்பட்டாா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 9:28 pm

Syndication

மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னையில் மனைவியை தாக்கி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்த கணவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

செருகளத்தூரைச் சோ்ந்த ஐயப்பன் (31). இவரது மனைவி ஜெயசித்ரா(26). இவா்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. தம்பதியரிடையே கருத்து வேறுபாடு இருந்ததால் அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில், சனிக்கிழமை ஏற்பட்ட தகராறின்போது ஜெயசித்ராவை தாக்கியதுடன் அவரது உடலில் மண்ணெண்னையை ஊற்றி தீவைத்து விட்டு ஐயப்பன் தப்பியோடிவிட்டாராம்.

இதில், காயமடைந்த ஜெயசித்ரா மீட்கப்பட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் பெருகவாழ்ந்தான் போலீஸாா் ஐயப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.