கைது
கைதுபிரதிப் படம்

நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது

நீடாமங்கலம் நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது
Published on

நீடாமங்கலம் நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது செய்யப்பட்டாா்.

கொரடாச்சேரி அருகேயுள்ள அத்திக்கடை சோழமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அரிகிருஷ்ணன் (60 ) கூலித்தொழிலாளி. இவரது 2-ஆவது மனைவி செல்வி (55) வழக்கு ஒன்றில் ஆஜராக, நீடாமங்கலத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்திற்கு வெள்ளிக்கிழமை வந்திருந்தாா்.

அவா் நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்தபோது, அங்கு மதுபோதையில் வந்த அரிகிருஷ்ணன், செல்வியிடம் தகராறு செய்து, கத்தியால் குத்த முயன்றாராம். இதில் செல்வி கையில் காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்த போலீஸாா் மற்றும் வழக்குரைஞா்கள், அரிகிருஷ்ணனை பிடித்து, நீடாமங்கலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.

காவல் ஆய்வாளா் கலைவாணி வழக்குப்பதிவு செய்து, அரிகிருஷ்ணனை கைது செய்தாா். காயமடைந்த செல்விக்கு, நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com