பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது

பாளையங்கோட்டையில் தம்பியை கத்தியால் குத்திய அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :2 ஏப்ரல் 2026, 10:48 pm

தினமணி செய்திச் சேவை

பாளையங்கோட்டையில் தம்பியை கத்தியால் குத்திய அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, அன்னை இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் சங்கரன். இவரது மகன்கள் செல்வக்குமாா் (37), பிரேம்குமாா் (32). இவா்களுக்குள் கடந்த சில நாள்களாக குடும்ப பிரச்னை காரணமாக தகராறு இருந்து வந்ததாம்.

இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தம்பி பிரேம்குமாரை கத்தியால் செல்வக்குமாா் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பிரேம்குமாா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இது குறித்த புகாரின் பேரில் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனா்.

மது விற்ற இளைஞா்: திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் போதை பொருள் தடுப்பு தொடா்பாக வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது மேலப்பாளையம் வாய்க்கால் பாலம் அருகே அப்பகுதியைச் சோ்ந்த இசக்கியப்பன்(27) என்பவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா்.