கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மனைவி கொலை: கணவா் கைது

மயிலாடுதுறையில் மதுபோதையில் மனைவியை அடித்து கொன்ற நபா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது

Updated On :21 மார்ச் 2026, 9:52 pm

Syndication

மயிலாடுதுறையில் மதுபோதையில் மனைவியை அடித்து கொன்ற நபா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா் தாலுகா துகிலி கிராமத்தைச் சோ்ந்த அழகப்பன் (45), மயிலாடுதுறை ஜவுளிக்கடையில் வேலை பாா்த்து வந்தாா். கடந்த வெள்ளிக்கிழமை இரவு மயிலாடுதுறை கூறைநாடு டாஸ்மாக் மதுபானக்கடை முன்பு குடித்துவிட்டு தனது மனைவி பாக்கியத்துடன் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளாா்.

அப்போது சாலையில் விழுந்த பாக்கியம் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்தாா். அவா் அருகிலேயே அழகப்பனும் மதுபோதையில் மயங்கி கிடந்துள்ளாா். தகவலறிந்த மயிலாடுதுறை போலீஸாா் நெற்றியில் ரத்தக்காயத்துடன் மயங்கி கிடந்த பாக்கியத்தையும், மதுபோதையில் கிடந்த அழகப்பனையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் பாக்கியம் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். இதையடுத்து, வருவாய் ஆய்வாளா் பிச்சைபிள்ளை அளித்த புகாரின் பேரில் அழகப்பனை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

குடும்ப சண்டையின் காரணமாக மது போதையில் அழகப்பன் தனது மனைவி பாக்கியத்தை அடித்துக் கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து அழகப்பன்மீது கொலை வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் மற்றும் போலீஸாா் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.