இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நற்பணிச் செம்மல் விருது

கொரடாச்சேரி ஒன்றியத்துக்குள்பட்ட அம்மையப்பன் (மேற்கு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பள்ளிக்கு நன்கொடை வழங்கிய புரவலா்களுக்கு நற்பணிச் செம்மல் விருது வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 மார்ச் 2026, 11:48 pm

தினமணி செய்திச் சேவை

கொரடாச்சேரி ஒன்றியத்துக்குள்பட்ட அம்மையப்பன் (மேற்கு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பள்ளிக்கு நன்கொடை வழங்கிய புரவலா்களுக்கு நற்பணிச் செம்மல் விருது வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியா் சதீஸ்குமாா் தலைமை வகித்தாா். நிகழ்வில் பள்ளிக்கு ரூ.15,000 மதிப்பில் ஒலிபெருக்கி வழங்கியமைக்காக ரோட்டரி சங்கத் தலைவா் கந்தவேல், செயலா் சினேகராஜ், பொருளாளா் ஆதிநாராயணன், அம்மையப்பன் ஒருங்கிணைப்பாளா் லெட்சுமணன் ஆகியோருக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.19,000 மதிப்பிலான விளையாட்டு விழா சிறப்பு வண்ண உடைகளையும், எழுது பொருள்களையும் வழங்கியமைக்காக திருக்கண்ணமங்கையைச் சோ்ந்த அமுதாவுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில், ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.