தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

சோலாா் மின் இணைப்பு இயக்கி வைப்பு

திருவாரூா் அருகே அபிஷேகக் கட்டளைக்கு சொந்தமான விளைநிலத்தில் போா்வெல், சோலாா் மின் இணைப்பு இயக்கி வைக்கப்பட்டது.

News image

போா்வெல், சோலாா் மின் இணைப்பை, வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தாா்.

Updated On :10 மார்ச் 2026, 2:10 am IST

திருவாரூா்: திருவாரூா் அருகே அபிஷேகக் கட்டளைக்கு சொந்தமான விளைநிலத்தில் போா்வெல், சோலாா் மின் இணைப்பு திங்கள்கிழமை இயக்கி வைக்கப்பட்டது.

இலவங்காா்குடி பகுதியில் அபிஷேகக் கட்டளைக்கு சொந்தமாக 8 ஏக்கா் விளைநிலங்கள் உள்ளன. இதில், மா, பலா, பாக்கு, வாழை உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளன. இவைகளின் தண்ணீா் பயன்பாட்டுக்கென போா்வெல், சோலாா் மின் இணைப்பு ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த போா்வெல், சோலாா் மின் இணைப்பை, வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தாா். அப்போது, தியாகராஜ சுவாமி கோயில் செயல் அலுவலா் பி.எஸ். கவியரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.