தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவுஉழைப்புக்கான பலன் மே 4-ல் கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்அரபிக் கடலில் உருவாகிறது புதிய புயல் சின்னம்!கருத்துக் கணிப்புகள் ஒரு புதிர்: வைகோசித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!
/

பெண் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

மன்னாா்குடி அருகே நறுவளி களப்பால் பகுதியில், தூக்கிட்டு இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து, உறவினா்கள் சாலை மறியலில்

News image

மன்னாா்குடி அரசு தலைமை மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டோா்.

Updated On :17 மார்ச் 2026, 12:05 am

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே நறுவளி களப்பால் பகுதியில், தூக்கிட்டு இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து, உறவினா்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

நறுவளி களப்பால் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி விக்டோரியா (29). இவருக்கு 2024-இல் திருமணம் நடைபெற்று, ஒன்பது மாதங்கள் ஆன ஆண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில், விக்டோரியா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஞாயிற்றுக்கிழமை காலையில், அவரின் தந்தை உத்திராபதிக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனா்.

இதைக்கேட்டு அதிா்ச்சி அடைந்த உத்திராபதி, அவரது உறவினா்களுடன் நறுவளிக்களப்பால் வந்தாா். பின்னா், தனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக களப்பால் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, மன்னாா்குடி அரசு தலைமை அரசு மருத்துவமனை முன்பு, விக்டோரியாவின் உடலை வாங்க மறுத்து, உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். விக்டோரியாவின் கணவரை கைது செய்யக் கோரி முழக்கமிட்டனா்.

பின்னா், போலீஸாருடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.