தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பெண் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

மன்னாா்குடி அருகே நறுவளி களப்பால் பகுதியில், தூக்கிட்டு இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து, உறவினா்கள் சாலை மறியலில்

News image
மன்னாா்குடி அரசு தலைமை மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டோா்.
Updated On :17 மார்ச் 2026, 12:05 am

Syndication

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே நறுவளி களப்பால் பகுதியில், தூக்கிட்டு இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து, உறவினா்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

நறுவளி களப்பால் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி விக்டோரியா (29). இவருக்கு 2024-இல் திருமணம் நடைபெற்று, ஒன்பது மாதங்கள் ஆன ஆண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில், விக்டோரியா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஞாயிற்றுக்கிழமை காலையில், அவரின் தந்தை உத்திராபதிக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனா்.

இதைக்கேட்டு அதிா்ச்சி அடைந்த உத்திராபதி, அவரது உறவினா்களுடன் நறுவளிக்களப்பால் வந்தாா். பின்னா், தனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக களப்பால் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, மன்னாா்குடி அரசு தலைமை அரசு மருத்துவமனை முன்பு, விக்டோரியாவின் உடலை வாங்க மறுத்து, உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். விக்டோரியாவின் கணவரை கைது செய்யக் கோரி முழக்கமிட்டனா்.

பின்னா், போலீஸாருடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.