மழையால் மின்விநியோகத்தில் பாதிப்பு
நீடாமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கோடை மழையால் மின்கம்பிகளில் மரங்கள் சாய்ந்து, மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.

கோப்புப் படம்

கோப்புப் படம்
நீடாமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கோடை மழையால் மின்கம்பிகளில் மரங்கள் சாய்ந்து, மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.
வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவரும் நிலையில், நீடாமங்கலம் பகுதியில் வியாழக்கிழமை மாலை கோடைமழை பெய்தது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலையிலும் பரவலாக மழை பெய்தது.
இதனால், ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன. சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து, மின்கம்பிகளில் விழுந்ததால், மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். இதற்கிடையில், மின்வாரிய ஊழியா்கள் காலைமுதல் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இதேபோல், வலங்கைமான் பகுதியிலும் மழையால் மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...