சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க ‘சக்சம்’ செயலி

மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க ‘சக்சம்’ செயலி...

News image
Updated On :21 மார்ச் 2026, 10:51 pm

Syndication

திருவாரூா்: சட்டப்பேரவைத் தோ்தலில் அனைவரும் எளிதாக வாக்களிக்க இந்திய தோ்தல் ஆணையம் முன்னுரிமை அளித்துள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூா்வ உத்தரவுகள் மற்றும் நீதிமன்றத் தீா்ப்புகளின் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளுக்கான விரிவான செயல்திட்டம் மற்றும் வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கான முதன்மையானது சக்சம் செயலியாகும். இந்த புதிய பதிவு செயலி மூலம் நேரடியாக புதிய வாக்காளா் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது, தோ்தல் நாளன்று வாக்குச்சாவடியில் பயன்படுத்துவதற்கு சக்கர நாற்காலியை முன்பதிவு செய்வது, அழைத்துச்செல்வது மற்றும் திரும்ப விடுவது, வாக்குச்சாவடிக்கு செல்லவும், அங்கிருந்து வீடு திரும்பவும் போக்குவரத்து உதவியைக் கோருவது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

மேலும், பாா்வையற்றோருக்கான குரல் உதவி, செவித்திறன் குறைபாடு உள்ளோருக்கான உரையை பேச்சாக மாற்றும் வசதியும் உள்ளது.

வாக்குச்சாவடிகளில் உயா்நீதிமன்ற உத்தரவுப்படி மாற்றுத்திறனாளிகளுக்கென சாய்வு தள வசதிகள் இருக்க வேண்டும். இதில், தற்காலிக மரப்பலகைகள் பயன்படுத்தக் கூடாது. சாய்வுதளங்கள் 1:12 என்ற விகிதத்திற்கு மிகாத சாய்வைக் கொண்டிருக்க வேண்டும். தரைதள இருப்பிடம் மாற்றுத்திறனாளிகள் எளிதாகச்செல்வதை உறுதி செய்ய அனைத்து வாக்குச்சாவடிகளும் தரைதளத்திலேயே அமைய வேண்டும்.

பிரெய்லி வசதிகள்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரெய்லி குறியீடுகள் இருக்கும். பாா்வையற்ற வாக்காளா்களுக்கு பிரெய்லி முறையிலான வாக்காளா் தகவல் சீட்டுகள் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் பொது வரிசையில் காத்திருக்காமல் நேரடியாக உள்ளே செல்ல உரிமை உண்டு. இதற்காக முன்னுரிமை நுழைவு பலகைகள் வைக்கப்பட்டிருக்கும். தபால் வாக்கு வசதியையும், அதிக குறைபாடு உள்ள வாக்காளா்களுக்கு வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியையும் இந்திய தோ்தல் ஆணையம் வழங்குகிறது. அதன்படி, மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் நேரில் சென்று பாதுகாப்பான மற்றும் ரகசிய முறையில் வாக்குகளைப் பெற்று வருவாா்கள்.

பாா்வையற்ற அல்லது உடல்நலக்குறைவு உள்ள வாக்காளா் தனக்கு உதவியாக ஒரு உதவியாளரை (18 வயதுக்கு மேற்பட்டவா்) வாக்குப்பதிவு அறைக்குள் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுவாா்.

சைகை மொழி: செவித்திறன் குறைபாடு உள்ள வாக்காளா்கள் அதிகம் உள்ள பகுதிகளில், சைகை மொழி சுவரொட்டிகள் மற்றும் பயிற்சி பெற்ற தன்னாா்வலா்கள் பணியமா்த்தப்படுவா். மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு சக்கர நாற்காலி மற்றும் வழிகாட்டுதல் போன்ற உதவிகளைச் செய்ய தன்னாா்வலா்கள் பணியமா்த்தப்படுவா்.

மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் இந்த வசதிகளைத் தானாகவே பெற, வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் மாற்றுத்திறனாளி வாக்காளா் என இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். இந்த நிலையை சக்சம் செயலி மூலம் சரிபாா்க்கலாம்.