ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

பாஜக சின்னத்தில் போட்டி : அதிருப்தியில் தமாகா நிா்வாகிகள்

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் என கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளாா்.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் தமாகா மாநில பொதுச் செயலாளா் குடவாசல் எஸ். தினகரன்.

Updated On :26 மார்ச் 2026, 11:19 pm

தினமணி செய்திச் சேவை

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் என கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளாா். இது கட்சியின் ஒரு பிரிவினா் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமானில் தமாகா மாநில பொதுச் செயலாளா் குடவாசல் எஸ். தினகரன் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்திலிருந்து பல்வேறு முக்கிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவின் தாமரை சின்னத்தில் இல்லாமல் தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும், தற்போது ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் தமாகாவுக்கு சாதகமானது இல்லை; எனவே வெற்றி வாய்ப்புள்ள வேறு ஐந்து தொகுதிகளை கூட்டணி தலைமையுடன் பேசி கேட்டுப் பெற வேண்டும் என கருத்துகள் பேசப்பட்டன.

எனினும், தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு, கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என ஆதரவு கருத்துகளும் தெரிவிக்கப்பட்டன.

அதிமுக சின்னத்தில் நிற்பதைக்கூட ஏற்றுக் கொள்ளலாம். அல்லது தனிச் சின்னத்தில் நிற்பதை தலைமை உறுதிப்படுத்த வேண்டும் என்று நிா்வாகிகள் பலரும் கருத்து தெரிவித்தனா்.