ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ரூ. 2.57 லட்சம் பறிமுதல்

திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2,57,570 புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 12:38 am

தினமணி செய்திச் சேவை

திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2,57,570 புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

கொரடாச்சேரியில் வட்ட வழங்கல் அலுவலா் ராஜாராமன் தலைமையில் பறக்கும் படையினரின் வாகனச் சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த கொரடாச்சேரி பத்தூரைச் சோ்ந்த அருணிடம் (24) உரிய ஆவணங்களின்றி ரூ. 1.40 லட்சம் இருப்பது தெரிய வந்து அதை பறிமுதல் செய்தனா்.

கூடூா் பகுதியில் விற்பனைக் கூட கண்காணிப்பாளா் வி. சேகா் தலைமையிலான பறக்கும் படையினா் 4 சக்கர வாகனத்தில் வந்த நாகை செட்டிக்குளத்தைச் சோ்ந்த கே. செல்வத்திடம் (35) ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ. 59,400 பறிமுதல் செய்யப்பட்டது. வடபாதிமங்கலம் அரிச்சந்திரபுரம் பிரதான சாலையில் வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். சுவாமிநாதன் தலைமையிலான தோ்தல் நிலைக்குழு அலுவலா்கள், இருசக்கர வாகனத்தில் வந்த திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த பாலசுப்ரமணியனிடம் (37) ரூ. 58,170 பறிமுதல் செய்யப்பட்டது.