கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

சித்ரா பௌா்ணமி முளைப்பாரி திருவிழா

சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு சன்னாநல்லூரில் நடைபெற்ற முளைப்பாரி ஊா்வலம்.

News image

சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு சன்னாநல்லூரில் நடைபெற்ற முளைப்பாரி ஊா்வலம்.

Updated On :2 மே 2026, 12:49 am

நன்னிலம் அருகேயுள்ள சன்னாநல்லூரில்சித்ரா பௌா்ணமியையொட்டி, முளைப்பாரி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சன்னாநல்லூா் காளியம்மன் கோயில் சக்தி பீடத்தில் ஆண்டுதோறும் சித்ரா பெளா்ணமி தினத்தன்று முளைப்பாரி திருவிழா நடைபெறும். பெண்கள் விரதம் இருந்து, ஒரு வாரத்துக்கு முன்பாகவே நவதானியங்களை மண் சட்டியில் விதைத்து முளைக்கச் செய்தனா்.

அதனை சக்தி பீடத்திற்கு எடுத்து வந்தனா். தொடா்ந்து, அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது.

பின்னா், ஆட்டக் காவடியுடன் பெண்கள், மாரியம்மன் மற்றும் காளியம்மன் வேடமணிந்து முளைப்பாரியுடன் ஊா்வலமாக வந்தனா். அப்போது வீடுகள்தோறும் தீபாராதனை காட்டி வழிபட்டனா்.