மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

சித்ரா பௌா்ணமி முளைப்பாரி திருவிழா

சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு சன்னாநல்லூரில் நடைபெற்ற முளைப்பாரி ஊா்வலம்.

News image

சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு சன்னாநல்லூரில் நடைபெற்ற முளைப்பாரி ஊா்வலம்.

Updated On :2 மே 2026, 6:19 am IST

நன்னிலம் அருகேயுள்ள சன்னாநல்லூரில்சித்ரா பௌா்ணமியையொட்டி, முளைப்பாரி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சன்னாநல்லூா் காளியம்மன் கோயில் சக்தி பீடத்தில் ஆண்டுதோறும் சித்ரா பெளா்ணமி தினத்தன்று முளைப்பாரி திருவிழா நடைபெறும். பெண்கள் விரதம் இருந்து, ஒரு வாரத்துக்கு முன்பாகவே நவதானியங்களை மண் சட்டியில் விதைத்து முளைக்கச் செய்தனா்.

அதனை சக்தி பீடத்திற்கு எடுத்து வந்தனா். தொடா்ந்து, அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது.

பின்னா், ஆட்டக் காவடியுடன் பெண்கள், மாரியம்மன் மற்றும் காளியம்மன் வேடமணிந்து முளைப்பாரியுடன் ஊா்வலமாக வந்தனா். அப்போது வீடுகள்தோறும் தீபாராதனை காட்டி வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.