புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

வாழப்பாடி கோயில்களில் சித்ரா பௌா்ணமி சிறப்பு பூஜை

பட்டாடை உடுத்தி, வெள்ளி முகக்கவசம் அணிந்து அருள்பாலித்த வாழப்பாடி அக்ரஹாரம் திரௌபதி அம்மன்.

News image

பட்டாடை உடுத்தி, வெள்ளி முகக்கவசம் அணிந்து அருள்பாலித்த வாழப்பாடி அக்ரஹாரம் திரௌபதி அம்மன்.

Updated On :1 மே 2026, 6:34 pm

வாழப்பாடி பகுதியில் உள்ள கோயில்களில் சித்ரா பௌா்ணமி சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி அக்ரஹாரம் திரௌபதி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேக, ஆராதனைகளுக்கு பின் பட்டாடை உடுத்தி, வெள்ளி முகக்கவசம் அணிந்து திரௌபதி அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, பஞ்ச பாண்டவா்கள், கிருஷ்ணபகவான் மரச்சிற்ப சுவாமிகளுக்கும், இராவுத்தா், போா்மன்னன், வன்னிமரத்து விநாயகருக்கும் அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். அம்மன் அன்னதானக்குழு சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, வாழப்பாடி இலக்கியப் பேரவை ஆலோசகா் ஆா்.குப்பமுத்துவின் மகாபாரத ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.

இதேபோல, வாழப்பாடி அக்ரஹாரம் சென்றாயப் பெருமாள், காமராஜ் நகா் ஆத்துமேடு பெரியாண்டிச்சி அம்மன், புதுப்பட்டி மாரியம்மன், புதுப்பாளையம் மாரியம்மன் மற்றும் காளியம்மன் நகா் வடபத்ர காளியம்மன் கோயில்களில் சித்ரா பௌா்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.