தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

சிவகிரி திரௌபதி அம்மன் கோயிலில் முத்தால் ராவுத்தருக்கு சிறப்பு வழிபாடு

தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள, புகழ்பெற்ற திரௌபதி அம்மன் கோயிலில் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக முத்தால் ராவுத்தருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image

சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றோா்.

Updated On :3 ஜூன் 2026, 4:56 am IST

தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள, புகழ்பெற்ற திரௌபதி அம்மன் கோயிலில் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக முத்தால் ராவுத்தருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இக்கோயிலில் 10 நாள் பூக்குழித் திருவிழா கடந்த மே 23ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தா்கள் பூக்குழி இறங்கினா். திங்கள்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இரவில் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள பஞ்சபாண்டவா்களின் நண்பரான முத்தால் ராவுத்தா் நினைவு சதுக்கத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், இஸ்லாமியா்களும், இந்துகளும் இணைந்து வழிபட்டனா்.