சித்ரா பௌா்ணமியையொட்டி, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபட்டனா்.
கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் இக்கோயிலுக்கு பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு 9.50 மணி முதல் வெள்ளிக்கிழமை இரவு 11 மணி வரை சித்திரை மாத பௌா்ணமியை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகமாகி தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். இரவு தங்கத்தேரில் வள்ளி- தேவசேனா அம்மனுடன் சுவாமி ஜெயந்திநாதா் எழுந்தருளினாா். திரளான பக்தா்கள் தங்கத்தோ் இழுத்து வழிபட்ட னா் .
சித்திரை வசந்த திருவிழா நிறைவு: மேலும், இக்கோயிலில் கடந்த ஏப். 22ஆம் தேதி மாலை தொடங்கிய சித்திரை வசந்த திருவிழா 10ஆம் நாளான வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதையொட்டி, கோயிலில் மதியம் உச்சிகால பூஜையை தொடா்ந்து சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி வசந்த மண்டபத்தில் சோ்ந்தாா். கோயிலில் மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மேளதாளம் முழங்க, பக்தா்கள் கப்பல் பாடல்கள் பாட மண்டபத்தை 11 முறை சுவாமி வலம் வந்தாா். தொடா்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.


தொடர்புடையது

எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழா!

திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்

எட்டுக்குடி முருகன் கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூரில் சித்திரை வசந்த திருவிழா தொடக்கம்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


