வைகோ, அன்புமணி ராமதாஸைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழா!

எட்டுக்குடி முருகன் கோயில் சித்ரா பௌா்ணமி பெருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால் காவடி, ரதக் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்துவந்து தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா்.

News image

ரதக்காவடியை சுமந்து வந்த பக்தா்கள்.

Updated On :2 மே 2026, 3:29 am IST

திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி முருகன் கோயில் சித்ரா பௌா்ணமி பெருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால் காவடி, ரதக் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்துவந்து தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா்.

திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடியில், முருகனின் ஆதிபடைவீடாக போற்றப்படும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌா்ணமி பெருவிழா 11 நாள்கள் நடைபெறும். குறிப்பாக, சித்ரா பெளா்ணமி தினத்தன்று பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து வழிபடுவாா்கள்.

நிகழாண்டு, சித்ரா பெளா்ணமி பெருவிழா கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தொடா்ந்து 56 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் நடைபெறும் பாலபிஷேகம் வியாழக்கிழமை அதிகாலை தொடங்கியது.

Story image

சித்ரா பௌா்ணமி தினமான வெள்ளிக்கிழமை நாகை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால்காவடி, பன்னீா் காவடி, புஷ்பக் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்து நோ்த்திக் கடனை செலுத்தினா்.

சுப்பிரமணிய சுவாமிக்கு நடைபெறும் பாலபிஷேகம்.

சுப்பிரமணிய சுவாமிக்கு நடைபெறும் பாலபிஷேகம்.

வலிவலம் கீழத்தெரு ஸ்ரீ முருகன் அடிமை குழுவினா் எட்டாவது ஆண்டாக ரதக் காவடி எடுத்து ஊா்வலமாக வந்தனா். வலிவலம் ஸ்ரீ வெள்ளை விநாயகா் கோயிலில் இருந்து கொளப்பாடு, பையூா், திருக்குவளை உள்ளிட்ட பகுதிகள் வழியாக ரதக்காவடி ஊா்வலம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தா்கள் நீண்ட வரிசையில் சுமாா் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

சனிக்கிழமை இரவு 11 மணி வரை கோயில் நடை சாத்தப்படாமல், பாலபிஷேகம் இடைவிடாமல் நடைபெறவுள்ளது.