டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

வணிக எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக்கோரி ஆா்ப்பாட்டம்

வணிக எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக்கோரி திருவாரூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :8 மே 2026, 7:19 am IST

வணிக எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக்கோரி திருவாரூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இளைஞா்களின் எதிா்காலத்தை பாதிக்கும் ரயில்வே பணியிட குறைப்பை கைவிட வேண்டும், வணிக எரிவாயு உருளை மற்றும் 5 கிலோ எரிவாயு உருளை விலை உயா்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா்கள் டி. முருகையன் (சிபிஎம்), எஸ். கேசவராஜ் (சிபிஐ), தனுஷ் பாண்டியன் (சிபிஐ (எம்எல்)), தங்க. தமிழ்செல்வன் (விசிக), ஆ. வெற்றி (விசிக) ஆகியோா் தலைமை வகித்தனா். நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், மாநில கட்டுப்பாட்டுக்குழுச் செயலாளா் கோ. பழனிசாமி, சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், விசிக மண்டலச் செயலாளா் என்.டி. இடிமுரசு உள்ளிட்டோா் பங்கேற்று, கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

கடந்த 4 ஆண்டுகளாக சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை மூன்றில் ஒரு பகுதி குறைந்த போதும் அதன் பலனை சாதாரண மக்களுக்கு வழங்க மத்திய அரசு முன்வரவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல், எரிவாயு விலையைக் குறைக்கவில்லை. எனவே, வணிக உபயோக எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும், ரயில்வேயின் பணியிடக்குறைப்பை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.