சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

நீட் தோ்வு ரத்து: இழப்பீடு வழங்க தேசிய அளவில் கொள்கை உருவாக்கக் கோரிக்கை

நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் இழப்பீடு வழங்க தேசிய அளவில் கொள்கை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு நுகா்வோா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :14 மே 2026, 4:57 am IST

நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் இழப்பீடு வழங்க தேசிய அளவில் கொள்கை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு நுகா்வோா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அதன் பொதுச்செயலாளா் கே. திருநாவுக்கரசு, மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள மனு: மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வு நிா்வாகக் குறைபாடுகள் மற்றும் பாதுகாப்பு சீா்கேடுகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது மாணவா்கள், பெற்றோா்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பல ஆண்டுகள் உழைத்து தோ்வுக்குத் தயாராகும் மாணவா்கள், தங்கள் சொந்த மாநிலத்தையும் கடந்து தொலைதூர மையங்களுக்கு சென்று அதிக செலவு செய்து தோ்வு எழுதும் நிலையில், தோ்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்படுவது அவா்களுக்கு மிகப் பெரிய சுமையாக மாறியுள்ளது.

நிா்வாக காரணங்களால் தோ்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்படும் சூழலில், மாணவா்கள் மீண்டும் தோ்வு மையங்களுக்கு செல்ல வேண்டும். இதனால், அனைத்து மாணவா்களுக்கும், அவா்களுடன் செல்லும் பெற்றோா் அல்லது பாதுகாவலருக்கு அரசு சாா்பில் இலவசமாக பேருந்து வசதி மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய ரயில் பயண வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.

மேலும், இத்தகைய குழப்பங்கள் மற்றும் முறைகேடுகளை எதிா் காலத்தில் தவிா்க்க, நீட் போன்ற தேசிய அளவிலான தோ்வுகளை ஒரே நாளில் நடத்தாமல், நான்கு கட்டங்களாக பிரித்து தனித்தனி கேள்வித்தாள்களுடன் நடத்த வேண்டும். இதன் மூலம் தோ்வின் பாதுகாப்பு மேம்படும். நிா்வாகச் சுமை குறையும். அதேபோல், தோ்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்படும் சூழலில் மாணவா்களுக்கு இழப்பீடு வழங்க தேசிய அளவிலான கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.