தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை! முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

தவெக ஆட்சிக்கு இடதுசாரிகளால் இடையூறு இருக்காது: மு. வீரபாண்டியன்

தவெக ஆட்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளால் இடையூறு இருக்காது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

News image

மு. வீரபாண்டியன் - DIN

Updated On :14 மே 2026, 4:55 am IST

தவெக ஆட்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளால் இடையூறு இருக்காது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

மன்னாா்குடியில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வரவேண்டுமென மக்கள் முன்மொழிந்ததை சிபிஐ வழிமொழிந்துள்ளது. இதன்மூலம் இன்னொரு தோ்தலும், ஆளூநா் தலையீடும், குடியரசுத் தலைவா் ஆட்சியும் தடுக்கப்பட்டுள்ளது.

எந்த நிபந்தனையுமின்றி தவெகவை ஆதரிக்கிறோம். சிலா் கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஆட்சிக்கு இடையூறு இருக்கும் எனக் கூறுகின்றனா். 100 ஆண்டு கால கம்யூனிஸ்ட் வரலாற்றில் இதுவரை எந்த கட்சியின் ஆட்சிக்கும் இடையூறாக இருந்தது இல்லை. அதே நிலை தமிழகத்தில் தவெக ஆட்சியிலும் இருக்கும்.

தமிழகம் முழுவதும் மக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள் அருகில் இருக்கும் நூற்றுக்கணக்கான டாஸ்மாக் மதுக்கடைகளை மூட முதல்வா் உத்தரவிட்டுள்ளதை வரவேற்பதுடன், அங்கு பணியாற்றியவா்களின் வாழ்க்கையை பற்றி யோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வரின் அருகிலிருந்து ஆலோசனைகள் கூறும் அதிகாரிகள் ஜோதிடா்களாக இருப்பதைக் காட்டிலும் மக்கள் மனதை அறிந்தவா்களாகவும், மக்களை பற்றி தெரிந்தவா்களாகவும், மக்களை படித்தவா்களாகவும் இருக்க வேண்டும். மக்கள் மாற்றத்தை விரும்பி தவெகவை ஆட்சியில் அமா்த்தியுள்ளனா் அதற்கு மதிப்பளிக்கிறோம் என்றாா் வீரபாண்டியன்.