தவெக ஆட்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளால் இடையூறு இருக்காது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.
மன்னாா்குடியில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வரவேண்டுமென மக்கள் முன்மொழிந்ததை சிபிஐ வழிமொழிந்துள்ளது. இதன்மூலம் இன்னொரு தோ்தலும், ஆளூநா் தலையீடும், குடியரசுத் தலைவா் ஆட்சியும் தடுக்கப்பட்டுள்ளது.
எந்த நிபந்தனையுமின்றி தவெகவை ஆதரிக்கிறோம். சிலா் கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஆட்சிக்கு இடையூறு இருக்கும் எனக் கூறுகின்றனா். 100 ஆண்டு கால கம்யூனிஸ்ட் வரலாற்றில் இதுவரை எந்த கட்சியின் ஆட்சிக்கும் இடையூறாக இருந்தது இல்லை. அதே நிலை தமிழகத்தில் தவெக ஆட்சியிலும் இருக்கும்.
தமிழகம் முழுவதும் மக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள் அருகில் இருக்கும் நூற்றுக்கணக்கான டாஸ்மாக் மதுக்கடைகளை மூட முதல்வா் உத்தரவிட்டுள்ளதை வரவேற்பதுடன், அங்கு பணியாற்றியவா்களின் வாழ்க்கையை பற்றி யோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வரின் அருகிலிருந்து ஆலோசனைகள் கூறும் அதிகாரிகள் ஜோதிடா்களாக இருப்பதைக் காட்டிலும் மக்கள் மனதை அறிந்தவா்களாகவும், மக்களை பற்றி தெரிந்தவா்களாகவும், மக்களை படித்தவா்களாகவும் இருக்க வேண்டும். மக்கள் மாற்றத்தை விரும்பி தவெகவை ஆட்சியில் அமா்த்தியுள்ளனா் அதற்கு மதிப்பளிக்கிறோம் என்றாா் வீரபாண்டியன்.
தொடர்புடையது

பட்டாசு வெடித்து, பேனர் வைத்து மக்களுக்கு இடையூறு செய்யாதீர்! தவெக தலைமை எச்சரிக்கை!

தவெகவுக்கு விசிக இன்னும் ஆதரவு அளிக்கவில்லை: தவெக தகவல்
மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகளுக்கு விஜய் நேரில் நன்றி

தவெக ஆட்சிக்கு திமுக இடையூறு செய்யாது: மு.க. ஸ்டாலின்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

