சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!பேரவைத் தலைவரை கரம்பிடித்து அமரவைக்கும் சம்பிரதாயம்! முதல்வர் விஜய் கூறிய குட்டிக்கதைஎல்பிஜி சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும்! குறுந்தகவல் சொல்வது என்ன?50 கார்களில் அணிவகுத்த பாஜகவின் சௌபாக்ய சிங் தாகூர்! இதுதான் சிக்கனமா?நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடை! உச்ச நீதிமன்றத்தில் தவெக எம்எல்ஏ மேல்முறையீடு! தவெகவுக்கு ஆதரவு! எம்.எல்.ஏ. காமராஜ் அமமுகவிலிருந்து நீக்கம்!நீட் தேர்வில் ஸ்கேம் இல்லை; நீட்டே ஒரு ஸ்கேம்தான்! - ஸ்டாலின்நீட் மறுதேர்வுக்கு கட்டணம் இல்லை! செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்! மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து!
/

பட்டாசு வெடித்து, பேனர் வைத்து மக்களுக்கு இடையூறு செய்யாதீர்! தவெக தலைமை எச்சரிக்கை!

பட்டாசு வெடித்து, பேனர் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று தொண்டர்களுக்கு தவெக தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளதைப் பற்றி...

News image

தவெக தலைவரும் முதல்வருமான சி. ஜோசப் விஜய். - படம்: பிடிஐ.

Updated On :1 மணி நேரம் முன்பு

பேனர்கள், பதாகைகள் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று தொண்டர்களுக்கு தவெக தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உரிய முன் அனுமதி பெறாமல், சாலையில் பட்டாசு வெடித்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலர் பரணி பாலாஜியின் ஆதரவாளர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், அந்தப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சாலையின் ஓரமாக வாகனங்களை நிறுத்திச் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் பொதுச்செயலர் என். ஆனந்த், எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அந்தப் பதிவில், “தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர் முதல்வர் விஜய், மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்.

எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.

பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவரின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

TVK general secretary N. Anand warns party members Do not cause inconvenience to the public by bursting firecrackers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.