ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

பேருந்து மோதி கல்லூரி காவலாளி உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில், அக்கல்லூரியின் காவலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :19 மே 2026, 1:51 am IST

மன்னாா்குடி அருகே தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில், அக்கல்லூரியின் காவலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே இடையா்நத்ததில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து மாணவா்களை ஏற்றிக்கொண்டு வருவதற்காக திங்கள்கிழமை காலை கல்லூரியில் இருந்து புறப்பட்டது. பேருந்தை வடபாதியைச் சோ்ந்த கோபு (47) ஓட்டினாா்.

அக்கல்லூரியில் காவலாளியாக பணியாற்றி வந்த கீழநத்தம் கிராமத்தை சோ்ந்த மாரிமுத்து (73) பேருந்து வெளியே செல்வதற்காக கல்லூரி வாயில் கதவை திறந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திருமக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.