மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இருசக்கர வாகனம் மோதியதில் காவலாளி உயிரிழப்பு

மொரப்பூா் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் காவலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 11:39 pm

மொரப்பூா் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் காவலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், வெண்ணாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஜில்லா கவுண்டா் மகன் முருகன் (65). இவா், மொரப்பூா் அருகேயுள்ள தனியாா் விடுதியில் இரவு காவலராகப் பணிபுரிந்து வந்தாராம்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு நேரத்தில் விடுதியில் இருந்து வெளியில் சென்ற முருகன், அரூா்-மொரப்பூா் நெடுஞ்சாலையில் குறுக்கே நடந்து சென்றாராம். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் அவா்

படுகாயம் அடைந்துள்ளாா். இதையடுத்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, 108 மூலம் அரூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டதாக பரிசோதனை செய்த அரசு மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இந்த சம்பவம் குறித்து மொரப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.