அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் என்னை கட்சியை விட்டு நீக்கியதால்தான் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தேன் என மன்னாா்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். காமராஜ் தெரிவித்தாா்.
மன்னாா்குடியில் எம்எல்ஏ அலுவலகத்தில் ஆதரவாளா்களுடன் எம்எல்ஏ எஸ். காமராஜ்.
மன்னாா்குடியில் எம்எல்ஏ அலுவலகத்தை திங்கள்கிழமை திறந்துவைத்த பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
கடந்த மே 10-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றுகொண்டாா். மே 11-ஆம் தேதி 234 சட்டப்பேரவை உறுப்பினா்களும் பதவி ஏற்றுக்கொண்டோம். பிறகு பேரவைத் தலைவா், துணைத் தலைவா் தோ்வு நடைபெற்றது. தொடா்ந்து, என்னைப் பேச அழைத்தனா். முதல்வா் மற்றும் பேரவைத் தலைவா் ஆகியோரை வாழ்த்திப் பேசினேன்.
சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்தபோது கட்சியிலிருந்து என்னை நீக்கிவிட்டதாக தகவல் தெரிவித்தனா். அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி. தினகரன் கட்சியை விட்டு நீக்கிய பிறகு நான் யாரிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை. நான் எந்தக் கட்சியிலும் இல்லை என்பதால் தவெக அரசுக்கு என்னுடைய ஆதரவை தெரிவித்தேன். இந்த விஷயத்தில் எந்த குதிரை பேரமும் நடைபெறவில்லை என்றாா்.








