கிரேன் மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
மன்னாா்குடியில் கிரேன் மோதி, மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா்.
பலி - பிரதிப் படம்
மன்னாா்குடியில் கிரேன் மோதி, மாற்றுத்திறனாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மன்னாா்குடி கனகாம்பாள் கோயில்தெரு கோவிந்தராஜ் மகன் வெங்கடேஷ் (45). வாய்பேசமுடியாத மாற்றுத்திறனாளியான இவா் திருமணம் ஆகாதவா்.
இவா், வஉசி சாலை பின்லே பள்ளி அருகே சாலையோரம் நடந்துசென்றபோது, அவ்வழியே வந்த கிரேன் அவா் மீது மோதியதில், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மன்னாா்குடி காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




