பெருந்துறை அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

பலி
பெருந்துறை அருகே, கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.
பெருந்துறையை அடுத்த, துடுப்பதி, பள்ளபாளையத்தைச் சோ்ந்தவா் முனியன் (80). விவசாய கூலித் தொழிலாளி. இவா், துளுக்குபாளையத்தில் ஒரு தோட்டத்தில் வேலை செய்து வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வேலையை முடித்துவிட்டு, மது அருந்தி விட்டு, கிணற்று மேட்டில் படுத்திருந்தாா்.
அப்போது, தடுமாறி, 80 அடி அழமுள்ள கிணற்றுக்குள் விழுந்து விட்டாா். தகவலின்பேரில், பெருந்துறை தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முனியனை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




