பாலியல் வன்முறை: "பிடிபட்ட சிறுவனுக்கும் சமமான தண்டனை தரவேண்டும்'

தில்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு அளிக்கும் தண்டனை இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறுவனுக்கும் வழங்க வேண்டும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் ஏ.கே. வாலியா வலியுறுத்தினார்.
Updated on
1 min read

 தில்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு அளிக்கும் தண்டனை இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறுவனுக்கும் வழங்க வேண்டும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் ஏ.கே. வாலியா வலியுறுத்தினார்.

"பெண் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும்; பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஓடுக்க வேண்டும்' என்ற தலைப்பில் தில்லியில் நடைபெற்ற கார்ட்டூன் கண்காட்சியை தில்லி  அமைச்சர் ஏ.கே. வாலியா மெழுகுவர்த்தி சனிக்கிழமை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ""இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிற குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனையே சிறுவனுக்கும் வழங்க வேண்டும். கொடிய குற்றங்கள் செய்பவர்கள் சிறுவர்கள் என்பதால் தண்டனையில் இருந்து தப்பித்து விடுகிறார்கள். ஆகையால், சிறாரின் வயதை 18 என்பதிலிருந்து 16 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com