வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஈரான் போர்! ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தொடரும் தாக்குதல்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் தகர்க்கப்பட்டுள்ளது குறித்து...

News image
துபை மீதான ஈரானின் தாக்குதல்... - AP
Updated On :10 மார்ச் 2026, 5:46 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் படைகள் ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) தாக்குதல் நடத்த முயன்ற ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைத் தகர்த்து வீழ்த்தியுள்ளதாக, அந்நாட்டு பாதுகாப்புப் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், வான் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

ஏற்கெனவே, கடந்த பிப். 28 முதல் நடைபெற்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி உள்பட 1,300-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.