சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

"காற்று மாசுவைக் கட்டுப்படுத்த அனைவரும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்' 

காற்று மாசுவைக் கட்டுப்படுத்த அனைவரும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் வியாழக்கிழமை 

News image
Updated On :28 டிசம்பர் 2017, 7:15 pm

DIN

காற்று மாசுவைக் கட்டுப்படுத்த அனைவரும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற காற்று மாசு தொடர்பான குறுகிய நேர விவாதத்தின் போது வலியுறுத்தப்பட்டது. தலைநகர் தில்லியில் ஏற்படும் காற்றுமாசு தொடர்பாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை குறுகிய நேர விவாதம் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கனிமொழி (திமுக),  டி. ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்),  ஏ.நவநீத கிருஷ்ணன் (அஇஅதிமுக) ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். அதன் விவரம் வருமாறு:
கனிமொழி (திமுக):  மாறி வரும் பருவநிலை மாற்றம்,  சுற்றுச்சூழல் காரணமாக குடிநீர் பாட்டில்களைக் கடைகளில் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. தலைநகரில் ஏற்படும் காற்று மாசு தொடர்ந்தால் ஆக்ஸிஜன் உருளைகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.  இதைத் தடுக்க வேண்டும். தில்லியைப் போன்று தமிழகத்தில் தொழில் நகரங்களான எண்ணூர், ஆலந்தூர், கடலூர் சிப்காட் பகுதிகளிலும் காற்று மாசுபட்டுள்ளது.
டி. ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்):  காற்றுமாசு தற்போது உலகளாவிய பிரச்னையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இயக்கவியல் விதியின்படி  நிலம், காற்று, நீர், மனிதர்கள் ஆகியவற்றுக்கு இடையே சமநிலை இருக்க வேண்டும். ஆனால், பேராசை பிடித்த, லாபம் ஈட்டும் எண்ணம் கொண்ட சக்திகளால் இயற்கை அழிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் அனைத்து நகரங்களிலும் காற்றின் மாசுவை கண்டறிய கண்காணிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும்.
ஏ.நவநீத கிருஷ்ணன் (அதிமுக): தலைநகர் தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் பல்வேறு உத்தரவுகளை தொடர்ந்து பிறப்பித்து வருகின்றன.  அனைவரும் தரமான காற்றை சுவாசித்து உயிர் வாழும் உரிமை குறித்து அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.  காற்று மாசுவைக் கட்டுப்படுத்த பொதுப் போக்குவரத்தை அனைவரும் பயன்படுத்த தொடங்க வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.