சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

எய்ம்ஸில் ஒன்றரை மாத குழந்தை பையில் கண்டெடுப்பு

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் ஒன்றரை மாத குழந்தை ஒன்று பையில் வைக்கப்பட்டிருந்தது கண்டெடுக்கப்பட்டது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 6:54 pm

DIN

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் ஒன்றரை மாத குழந்தை ஒன்று பையில் வைக்கப்பட்டிருந்தது கண்டெடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக தில்லி போலீஸார் கூறியதாவது:
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நவம்பர் 2-ம் தேதி பையில் ஏதோ அசைவதைக் கண்ட அங்கிருந்தவர்கள் பாதுகாவலர்களுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் பையை திறந்து பார்த்தபோது, அதில் ஒன்றரை மாத குழந்தை இருந்தது. இதையடுத்து, அந்தக் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. பின்னர் மருத்துவர்கள், போலீஸாருக்கும் தகவல் அளித்தனர். அந்தக் குழந்தை நல்ல உடல் நிலையில் உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவின் மூலம், யார் அந்தக் குழந்தையை விட்டுச் சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.