எய்ம்ஸில் ஒன்றரை மாத குழந்தை பையில் கண்டெடுப்பு
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் ஒன்றரை மாத குழந்தை ஒன்று பையில் வைக்கப்பட்டிருந்தது கண்டெடுக்கப்பட்டது.


தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் ஒன்றரை மாத குழந்தை ஒன்று பையில் வைக்கப்பட்டிருந்தது கண்டெடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக தில்லி போலீஸார் கூறியதாவது:
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நவம்பர் 2-ம் தேதி பையில் ஏதோ அசைவதைக் கண்ட அங்கிருந்தவர்கள் பாதுகாவலர்களுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் பையை திறந்து பார்த்தபோது, அதில் ஒன்றரை மாத குழந்தை இருந்தது. இதையடுத்து, அந்தக் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. பின்னர் மருத்துவர்கள், போலீஸாருக்கும் தகவல் அளித்தனர். அந்தக் குழந்தை நல்ல உடல் நிலையில் உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவின் மூலம், யார் அந்தக் குழந்தையை விட்டுச் சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...